நிலத்தகராறில் 3 பேர் கும்பலால் லாரி ஓட்டுநர் சரமாரியாக வெட்டிக்கொலை.. சேலத்தில் நடந்த பயங்கரம்.!
நிலத்தகராறில் 3 பேர் கும்பலால் லாரி ஓட்டுநர் சரமாரியாக வெட்டிக்கொலை.. சேலத்தில் நடந்த பயங்கரம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி கடம்பூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 42). இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியைச் சார்ந்தவர் பங்காரு (வயது 62). பங்காருவுக்கும் - சீனிவாசனுக்கும் இடையே இரண்டு ஏக்கர் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலத்தினை சீனிவாசன் மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் அனுபவித்து வந்த நிலையில், அந்த சொத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக பங்காரு மற்றும் அவரது மகன்கள் ரவிச்சந்திரன், பேரன்கள் மணிகண்டன் விஜி ஆகியோர் கேட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் சீனிவாசன் கெங்கவல்லிக்கு சென்று இறைச்சி வாங்கிவிட்டு கடம்பூர் சாலையில் திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, கணவாய் காடு பகுதியில் அவரை வழிமறித்த ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன், விஜய் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக ஆத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.