என்னக் கொடுமை இது..! பச்சிளம் பெண் குழந்தை விற்பனை விவகாரம்..! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்..!
என்னக் கொடுமை இது..! பச்சிளம் பெண் குழந்தை விற்பனை விவகாரம்..! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்..!
சேலம் மாவட்டத்தில் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடந்த முயன்ற விவகாரத்தில் குழந்தையின் தாய் மற்றும் அவரது சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக குழந்தை கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட இடைத்தரகர்களான லதா, வளர்மதி மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்போது கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் பச்சிளம் குழந்தையின் தாய் அனுமதியுடன் தான் குழந்தையை எடுத்து சென்றதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கூறுகையில் வறுமையின் காரணமாக தான் குழந்தையை விற்க முயற்சித்ததாகவும் மேலும் இடைத்தரகர்கள் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டியதால் குழந்தையை கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். தற்போது தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் கேட்டு கொண்டுள்ளனர்.