திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... பரிதாபமாக பிரிந்த உயிர்...

திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... பரிதாபமாக பிரிந்த உயிர்...



Road accident in natham

சாலையில் திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பைக் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புறநகர் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார் அழகர் சாமி. இவர் நேற்று வழக்கம் போல் மெக்கானிக் கடையை நடத்தி விட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

natham

அப்போது வாகனம் மூன்றுலாந்தர் பகுதியை வந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் அழகர்சாமி மாட்டின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.