அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!


Rain update for chennai and Tamilnadu for next 48 hrs

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ள தகவலின்படி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெய்யில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளதால் 11 மணி முதல் 3 மணி வரை யாரும் மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rain update

அதேநேரம், அடுத்த 48 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, , தருமபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை,  திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்ஸியஸ் வரை வெய்யில் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.