இதுபோன்ற காவல்துறை அதிகாரியால் தமிழ்நாடே தலைநிமிரும்! பாராட்டும் பொதுமக்கள்!

இதுபோன்ற காவல்துறை அதிகாரியால் தமிழ்நாடே தலைநிமிரும்! பாராட்டும் பொதுமக்கள்!



pudukottai SP new service for public

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி, விபத்துகள், தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பவர்கள், மணல் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் செப்பவர்கள், பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற அணைத்து புகார்களையும் தெரிவிக்க hello police-7293911100 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் கொடுக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை போன் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது குறுந்தகவல் மூலமாகவோ தெரிவித்தால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் லாட்டரி மற்றும் போதை ஊசி பழக்கங்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது, மது வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது அதற்க்கு ஒரு முற்று புள்ளி வையுங்கள் என தன்னார்வலர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்தநிலையில் புதுக்கோட்டை யில் கயவர்களை சூரையாட அதிரடி சேவையை பொதுமக்களின் நலனுக்காக கொண்டுவந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளருக்கு பொதுமக்களும், தன்னார்வலர்களும் நன்றியினை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற காவல்துறை அதிகாரியால் தமிழ்நாடே தலைநிமிரும் எனவும் கூறுகின்றனர்.