குளித்துக்கொண்டு இருந்த தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகன்.. விசாரணையில் பகீர் தகவல்.. பேரதிர்ச்சி சம்பவம்.!!

குளித்துக்கொண்டு இருந்த தாயை உலக்கையால் அடித்து கொன்ற மகன்.. விசாரணையில் பகீர் தகவல்.. பேரதிர்ச்சி சம்பவம்.!!



Pudukkottai Mother Killed by Son She Reject Give Money Drinking Alcohol

மதுபானம் அருந்த பணம் கொடுக்க மறுத்த வளர்ப்புதாயை மகன் உலக்கையால் அடித்துக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்டகுலம், இராசப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி. இவரின் மனைவி வீரம்மாள் (வயது 45). இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த 25 வருடத்திற்கு முன்னதாக செல்வராஜ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். செல்வராஜுக்கு தற்போது 28 வயது ஆகிறது. 

இந்நிலையில், கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக சன்னாசி உயிரிழந்துவிட்டார். செல்வராஜ் கார் ஓட்டுநராக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும் செல்வராஜ், தாயிடம் செலவுக்கு என பணம் வாங்கி சென்று, அனாவசிய செலவுகள் செய்து பணத்தை விரயம் செய்துள்ளார். 

pudukkottai

நேற்று மீண்டும் ஊருக்கு வந்த செல்வராஜ் தாயிடம் மதுபானம் அருந்த பணம் கேட்டுள்ளார். வீரம்மாள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் தனது வளர்ப்பு தாய் குளித்துக்கொண்டு இருக்கும் போதே உலக்கையில் அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் வீரம்மாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர், நிலைமையை உணர்த்த செல்வராஜ் தப்பி செல்லவே, இந்த தகவல் வெள்ளனூர் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜுக்கு வலைவீசப்பட்டுள்ளது.