குழந்த பெற்றெடுத்த தினத்தன்றே தாய்க்கு கருத்தடை.! 3 வது நாளில் பெண் உயிரிழப்பு.! கொந்தளித்த உறவினர்கள்.!

குழந்த பெற்றெடுத்த தினத்தன்றே தாய்க்கு கருத்தடை.! 3 வது நாளில் பெண் உயிரிழப்பு.! கொந்தளித்த உறவினர்கள்.!



pregnant women died after delivery

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர்,  பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 5 வயதில் மகன் உள்ளார். இந்தநிலையில், ராஜாவின் மனைவி சுதா இரண்டாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்தநிலையில், சுதா பிரசவத்திற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19-தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சுதாவிற்கு 20-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்த பெற்றெடுத்த தினத்தன்றே சுதாவிற்கு கருத்தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், தாயும் குழந்தையும் நலமாக இருந்த நிலையில் சுதாவிற்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த சுதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சுதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சுதாவின் உடலை பெற்று அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர் சுதாவின் உறவினர்கள்.