லாரி மீது மது அருந்திய வாலிபர் மரணம்.. காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை.!
லாரி மீது மது அருந்திய வாலிபர் மரணம்.. காரணம் என்ன?..! போலீசார் தீவிர விசாரணை.!
லாரி மீது அமர்ந்து மது அருந்திய வாலிபர் மதுபோதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் ஏற்றிவந்த லாரி கிளீனராக பணியாற்றி வந்தவர் ராஜ். இவர் வாகனத்தின் மேல் அமர்ந்து நேற்று தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது மது போதையில் லாரியில் இருந்து எழுந்து பின்னால் நகர்ந்த அவர், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலம், குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் உயிரிழந்திருக்கலாமா? என்ற கோணங்களிலும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.