சொந்த மகளை வீட்டின் அறையில் பூட்டி., தந்தை - மகனுடன் சேர்ந்து வெறிச்செயல்..! பதறவைக்கும் சம்பவம்..!! 

சொந்த மகளை வீட்டின் அறையில் பூட்டி., தந்தை - மகனுடன் சேர்ந்து வெறிச்செயல்..! பதறவைக்கும் சம்பவம்..!! 


police-arrested-father-and-son

தந்தை, மகனுடன் தான் பெற்ற மகளையே அடித்து துன்புறுத்திய கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததை விளக்குகிறது இந்த செய்திதொகுப்பு.

சென்னையில் உள்ள மாதவரம் நெடுஞ்சாலை தபால் பெட்டி அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பழனி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருக்கு ஹேமந்த்குமார் என்ற மகனும், அனுராதா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், அனுராதா திருமணமாகி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக தன் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

அனுராதா அயனாவரத்தில் உள்ள ஒரு செல்போன் உதிரிபாக கடையில் பணிபுரிந்து வரும் நிலையில், குடும்பபிரச்சனை காரணமாக இவர்கள் மூவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக தந்தை பழனி மற்றும் தம்பி ஹேமந்த்குமார் இருவரும் அனுராதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் அனுராதாவை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடித்து துன்புறுத்தி பூட்டி விட்டு வெளியே சென்றனர். பின் எப்படியோ அங்கிருந்து தப்பித்த அனுராதா, உடலில் ஏற்பட்ட காயங்களால் சிகிச்சைக்காக அயனாவரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றள்ளார். 

chennai

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின் இது குறித்து மருத்துவமனை சார்பில் மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தந்தை பழனி மற்றும் ஹேமந்த்குமார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் அனுராதாவை பயங்கரமாக தாக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தார்.