அப்பாடியோ ஒரு வழியா முடிஞ்சது...ஒரே சாவியில் 11இருசக்கர வாகனத்தை திருடிய இருவர் கைது...
அப்பாடியோ ஒரு வழியா முடிஞ்சது...ஒரே சாவியில் 11இருசக்கர வாகனத்தை திருடிய இருவர் கைது...
சென்னை ஆவடியில் ஒரே சாவியை வைத்து 11 இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலவேடு பகுதியில் உள்ள சாலையில் நேற்று போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் ஒரே சாவியை பயன்படுத்தி 11 இருசக்கர வாகனத்தை திருடி மெக்கானிக் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட திருநின்றவூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் பாக்கம் வ.உ.சி நகரை சேர்ந்த மெக்கானிக் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் திருடி சென்ற 11 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.