7 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன மகளை டிவியில் உயிருடன் பார்த்த பெற்றோர்! பரபரப்பு சம்பவம்!



parents-found-missing-daughter-after-7-years-in-tv

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகள் இம்மாகுலேட். இவருக்கு 27 வயது இருக்கும்போது டேவிட் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. டேவிட் நடத்திவந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால், தான் வேலைக்கு செல்வதாக கூறி, மென் பொறியாளராக வேலை தேடி சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார் இம்மாகுலேட்.

கணினி துறையில் வேலை தேடி சென்ற அவருக்கு வீட்டு வேலைதான் கிடைத்ததாகவும், இதனால் மனமுடைந்துபோன இம்மாகுலேட் கடந்த 2013 ஆம் ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதகாவும் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை நம்ப மறுத்த அந்தோணி, தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Mystery

விசாணைக்கு பிறகு, இமாகுலேக்டின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு இமாகுலேக்டின் உடல் வந்துள்ளது. ஆனால், இது தங்கள் மகள் இல்லை என பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் இவர் இம்மாகுலேட்தான் என கூறியதை அடுத்து மகளை அடக்கம் செய்துள்ளன்னர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் 23 பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தொலைகாட்சி வீடியோவில் இமாகுலேட் இருப்பதாக அவருடைய பெற்றோர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து எங்கள் மகளை எப்படியாவது பத்திரமாக மீட்கவேண்டும் என்று வெளியுறவு துறைக்கு கடிதம் எழுதியிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.