வீட்டில் தனியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.!

வீட்டில் தனியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.!



old man arrest for torture to young girl

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், காட்பாடி பகுதியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்பாடியை அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. 64 வயது நிரம்பிய இவர் அந்தப்பகுதியில் வீட்டில் தனியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது நடந்த சம்பவம் குறித்து தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவர் முனுசாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனுசாமியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.