நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் பலி.! புதுக்கோட்டையில் நடந்த சோக சம்பவம்.!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் பலி.! புதுக்கோட்டையில் நடந்த சோக சம்பவம்.!


ntk-member-died-in-accident

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் கனகரத்தினம், இவர் நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பாசறைத் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊரான கீரமங்கலம் சென்று தனது பெற்றோரை பார்த்துவிட்டு, பின்பு மீண்டும் இரு சக்கர வாகனத்தில், ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது ஆலங்குடி ஆயிப்பட்டி விலக்கு சாலை அருகே உள்ள பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

NTKஇந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மரண செய்தி நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.