ஓரங்கட்டப்பட்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.! கடுப்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.!

ஓரங்கட்டப்பட்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.! கடுப்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்.!


not-appear-ops-name-gvt-function-board

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே மறைமுக மோதல் போக்கு நீடித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், யார் முதல்வர் வேட்பாளார் என்பதே தற்போது அதிமுகவில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை விட்டு அதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனையடுத்து அமைச்சர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வீடு என ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் அரசு விழாவிற்காக, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாதது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ops

சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. தற்போது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை. இதனிடையே  துணை முதலமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.