மக்களே ரெடியா?? அதிகரிக்கும் ஒமைக்ரான்.. இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!!

மக்களே ரெடியா?? அதிகரிக்கும் ஒமைக்ரான்.. இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!!


Night lockdown implemented in UP and MP

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் டெல்ட்டா வகை கொரோனாவை விட வேகமாக பரவும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், ஒமைக்ரான் வகை கொரோன பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் தேவைப்பட்டால் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்திரபிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்திலும் விரைவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.