ஒரு தலை, நான்கு கை, கால்களுடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்.! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.!
ஒரு தலை, நான்கு கை, கால்களுடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்.! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.!
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் நான்கு கால்கள், நான்கு கைகள், ஒரு தலையுடன் மிகவும் வினோதமாக பிறந்துள்ள ஆண் குழந்தையால் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் சுஷாந்திக்கு சுயபிரசவம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் வலி மிகவும் அதிகமாக இருந்ததால் சுஷாந்தியால் சுகப்பிரசவத்திற்கு ஒத்துழைக்கமுடியவில்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். உடனே அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டபோது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது.
ஆம், சுஷாந்திக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளின் தலை, முகம், மூக்கு அனைத்தும் ஒன்றாக இருந்தநிலையில் உடல் பாம்புபோல பின்னி பிணைந்துள்ளது. மேலும் குழந்தைக்கு நான்கு கால்கள், நான்கு கைகள் இருந்துள்ளது.
இந்த அதிசய குழந்தையை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதேநேரம் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையை தீவிரமாக கண்காணித்துவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தமிழகத்தில் வேலை பார்த்துவந்த இவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கையே தங்கிவிட்டநிலையில் அவர்களுக்கு தற்போது அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.