நான்கு பக்கமும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு..! நடுவே உள்ள குழியில் உடல் முழுவதையும் உயிரோடு புதைத்து சாமியார் செய்த பூஜை..! வைரல் வீடியோ..!
நான்கு பக்கமும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு..! நடுவே உள்ள குழியில் உடல் முழுவதையும் உயிரோடு புதைத்து சாமியார் செய்த பூஜை..! வைரல் வீடியோ..!
கொரோனா வைரஸை விரட்டுவதற்காக உடல் முழுவதையும் பூமியில் புதைத்துக்கொண்டு, தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு நான்கு பக்கமும் நெருப்பை பற்றவைத்து சாமியார் ஒருவர் பூஜை நடத்தியுள்ள சம்பவம் வீடியோவாக வைரலாகிவருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சாமியார் சீனிவாசன் என்பவர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் சிறப்புப் பூஜை ஒன்றை செய்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்கவும், மக்களை வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்கவும் இந்த சிறப்பு பூஜையை செய்துவதாக கூறியுள்ளார் அந்த சாமியார்.
அதன்படி, நான்கு பக்கமும் நெருப்பை பற்றவைத்து, நெருப்புக்கு நடுவே இருக்கும் குழி ஒன்றில் இறங்கி, தனது உடல் முழுவதையும் மண்ணில் புதைத்தவாறு, தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு அந்த சாமியார் பூஜை நடத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. இதோ அந்த காட்சிகள்.