மருமகனுக்கு ஏற்பட்ட சண்டையை சரிசெய்ய பேச்சுவார்த்தைக்கு போன மாமனார்.! பரிதாபமாக போன உயிர்.!

மருமகனுக்கு ஏற்பட்ட சண்டையை சரிசெய்ய பேச்சுவார்த்தைக்கு போன மாமனார்.! பரிதாபமாக போன உயிர்.!



murder in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை கரையோரம் நிறுத்துவதில்  முகமது சாலிகு என்பவருடன் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் சரியாகி இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனையடுத்து பாதுஷா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். முகமது சாலிகு அவரது கூட்டாளிகளுடன் வீட்டிற்கு சென்று பாதுஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுஷாவின் மாமனார் காதர் சாகிப் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தைக்கு சரிவராத முகமது சாலிகு மற்றும் அவரது கூட்டாளிகள் காதர் சாகிப்பை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த காதர் சாகிப்பை அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.