காட்டுப்பகுயில் ஆடு மேய்க்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! நடந்தது என்ன? தீவிர விசாரணையில் காவலர்கள்..!!

காட்டுப்பகுயில் ஆடு மேய்க்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! நடந்தது என்ன? தீவிர விசாரணையில் காவலர்கள்..!!



murder-7dzesq

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள செங்காத்தாகுளம் காட்டுப் பகுதிக்கு நேற்று ஒருவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார். அங்கு தரையில் இரத்தம் சிதறி கிடப்பதை பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனே பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். 
 
தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து இரத்தம் சிதறி கிடந்த  இடத்தை பார்வையிட்டு,  மண்வெட்டியால் அந்த இடத்தை தோண்டினர். அதில், 30 வயது மிக்க ஆண் சடலம் தலை இல்லாமல் உடல் மட்டும் இருந்ததை கண்ட போலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், போலீசார் தலையில்லா ஆண் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு போலிசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, இவரின் தலை துண்டித்து கொலை செய்து மண்ணில் புதைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.