#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
எந்த சூழ்நிலையிலும் சசிகலா அ.தி.மு.க.வில் நுழைய முடியாது.! கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி.!
எந்த சூழ்நிலையிலும் சசிகலா அ.தி.மு.க.வில் நுழைய முடியாது.! கே.பி.முனுசாமி பரபரப்பு பேட்டி.!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். ஆனாலும், டிடிவி தினகரனின் அ.ம.மு.க தனித்து போட்டியிட்டு அதிமுக பல இடங்களில் தோற்பதற்கு காரணமாக அமைந்தது.
இதனையடுத்து நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இந்தநிலையில் சசிகலா சமீபத்தில் சில தொண்டர்களுடன் செல்போனில் பேசும் ஆடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார். அ.தி.மு.க.வை திசைதிருப்பி தொண்டர்களைக் குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய சசிகலா அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருப்பது நல்லது என்று கருதுகிறேன். எந்த சூழ்நிலையிலும் சசிகலா அ.தி.மு.க.வில் நுழைய முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.