கொடூரத்தின் உச்சம்... மகள் மீதான பாலியல் சீண்டலில் தாய்க்கு உடந்தை... காதலன் மற்றும் தாய் கைது.!

கொடூரத்தின் உச்சம்... மகள் மீதான பாலியல் சீண்டலில் தாய்க்கு உடந்தை... காதலன் மற்றும் தாய் கைது.!



mother-of-a-14-year-old-and-her-lover-arrested-for-sexu

கோவையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டிருப்பது அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. கணவரை பிரிந்து தாயுடன் வாழ்ந்து வரும் இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மஞ்சுளாவிற்கும் சென்னையில் தனியார் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வரும் பால் பிரவீன் என்பவருக்குமிடையே நெருங்கிய பழக்கம் இருந்திருக்கிறது.

tamilnaduஇதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கேயம் பாளையம் வந்து மஞ்சுளா உடன் தங்கியிருந்த பால் பிரவீன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மஞ்சுளாவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் பதறிய சிறுமி தனது பாட்டியிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

tamilnaduஇந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறை  பால் பிரவினை கைது செய்தது. மேலும் இந்த பாலியல் சீண்டலில் அவருக்கு துணையாக இருந்த சிறுமியின் தாயார் மஞ்சுளாவையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.