இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியை இப்படித்தான் உஷார் செய்தேன் கள்ளக்காதலன் சுந்தரம் வாக்குமூலம்!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியை இப்படித்தான் உஷார் செய்தேன் கள்ளக்காதலன் சுந்தரம் வாக்குமூலம்!


Mother killed her two children and planned to escape with men

பெற்ற தாயே தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் வைத்து கொன்றுவிட்டு, கள்ள காதலனுடன் ஓட முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவன், மகன், மகள் என மூவரையும் கொள்ள திட்டமிட்ட அபிராமி அன்று தனது கணவர் வீட்டிற்கு வராததால் தனது குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தப்பித்து ஓடி விட்டார்.


இந்நிலையில், அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து இன்று காலை நாகர்கோவிலில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.அப்போது கைது செய்யப்பட்ட அவள் போலீசாருக்கு  அளித்த வாக்குமூலத்தில் “குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று நான் அடிக்கடி பிரியாணி சாப்பிடுவேன்.

அப்போது, அங்கு பில் போடும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் அடிக்கடி அந்த கடைக்கு சென்று பிரியாணி வாங்குவேன். எனவே, நாளடைவில் சுந்தரத்துடன் எனக்கு கள்ள உறவு ஏற்பட்டது.

abirami killed children

இதை தெரிந்த என கணவர் என்னை கண்டித்தார். ஆனாலும் என்னால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை. எனவே, கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் சந்தோஷமாக வாழலாம் என நினைத்தேன். ஆனால், அன்று என் கணவர் வீட்டிற்கு வராததால் அவர் தப்பித்துவிட்டார். எனவே, குழந்தைகளை மட்டும் கொன்று விட்டு தப்பி சென்று விட்டேன்”

பின்னர் அவரின் கள்ள காதலன் சுந்தரம் அளித்த வாக்குமூலத்தில் நான் வேலை செய்யும் பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார்,அப்பொழுது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.அந்த சமயத்தில் அவர் பிரியாணி வாங்கும்போது ஸ்பெசலாக சேர்த்து அதிகமாக பார்சல் கட்டி கொடுப்பேன்.இதனால் எனக்கும் அபிராமிக்கும் உள்ள நெருக்கம் அதிகமானது.!