சொத்துத்தகராறில் தாய், மகன் படுகொலை... கடப்பாரையால் குத்திக்கொலை செய்த உறவினர்கள்..! போலீசார் வலைவீச்சு..!

சொத்துத்தகராறில் தாய், மகன் படுகொலை... கடப்பாரையால் குத்திக்கொலை செய்த உறவினர்கள்..! போலீசார் வலைவீச்சு..!


mother-and-son-murdered-by-his-relatives

சொத்துத்தகராறு காரணமாக தாய் மற்றும் மகனை கடப்பாரையால் குத்திக்கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அடுத்த செருகளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கர் குடும்பத்தினர். இவர்களுக்கும், இவரது அண்ணன் மகன்களான செபஸ்டின் மற்றும் அன்பழகன் குடும்பத்தினருக்கும் இடையில் பூர்வீக இடம் தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவ தினத்தன்று மீண்டும் இரு குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளனது. ஆவேசமடைந்த அண்ணன் மகன்கள் இருவரும் அருகாமையில் இருந்த ஒரு கடப்பாரையை எடுத்து பாஸ்கரின் மனைவி அலங்காரம் மற்றும் அவரது மகன் அஜய் ஆகியோரை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

thiruvarur

இந்த தாக்குதலில் பாஸ்கரின் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காவல் துறையினருக்கு இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

அப்போது பாஸ்கரின் அண்ணன் மகன்கள் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்ததைத் தொடர்ந்து, போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.