புதுக்கோட்டையில் பயங்கரம்: 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்.! அதிர்ச்சி காரணம்.!

புதுக்கோட்டையில் பயங்கரம்: 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்.! அதிர்ச்சி காரணம்.!


mom killed two children in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர்கோவில் பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பொன்னடைக்கன்-பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களுக்கு ஜெகதீசன் (2) மற்றும் 8 மாத குழந்தை தர்ஷினியா என 2 பிள்ளைகள் உள்ளனர்.

பொன்னடைக்கன் பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ள நிலையில் பொன்னடைக்கன் கோவில் திருவிழாவிற்காக கருப்பர் கோவில்பட்டிக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த பொன்னடைக்கன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் குடும்ப பிரச்சினை நினைத்து மன விரக்தி அடைந்த பஞ்சவர்ணம் தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றதோடு இத்தகவலை தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதனால் பதறிய பஞ்சவர்ணத்தின் தாயார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளார். அங்கு அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கையில் அங்கு அவரது குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்தனர்.

இதனையடுத்து போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக பெற்ற தாயே குழந்தைகளை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.