நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
நீ எல்லாம் என்ன ஜென்மம்... ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ். 34 வயது நிரம்பிய இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தையும், மற்றும் ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண், திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவல் கொடுத்துள்ளார். பதறியடித்து வீட்டிற்கு ஓடி வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை எடுத்துகொண்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும், குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் கார்த்திகாவின் செல்போன் எண்ணுக்கு வந்து, சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போனுக்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது. இதில் மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் அதிகநேரம் பேசியிருப்பதும், இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரிய வரவே, கார்த்திகாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து காய்கறி கடை நடத்தும் சுனிலை போலீசார் விசாரித்ததில், அவர் கார்த்திகாவிற்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும், அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கார்த்திகாவிடம் விசாரித்ததில், காதலில் மூழ்கி இரண்டு குழந்தைகளை கொன்றால் ஏசுனில் ஏற்றுகொள்வார் என நினைத்து குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்புமாவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.
மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிடாததால் தப்பித்து கொண்டது. அந்த விஷயம் தாமதமாக தெரிய வரவே, மூத்த குழந்தையை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கார்த்திகாவை சிறையிலடைக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கள்ளகாதலுக்காக தான் பெற்ற குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடையவைத்துள்ளது.