மணக்கோலத்தில் காத்திருந்த திருமண ஜோடி.! இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

மணக்கோலத்தில் காத்திருந்த திருமண ஜோடி.! இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!



mmk stalin meet wedding couple

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்குவளை இல்லத்துக்கு சென்றுள்ளார். 

நேற்று முன்தினம்திருவாரூரில் இருந்து காரில் திருக்குவளை நோக்கி ஸ்டாலின் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது, திருவாரூர் பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரை சேர்ந்த சோப்ரா-ரமா ஆகியோர் தமிழக முதல்வரை பார்ப்பதற்காக மண்டபத்தின் வெளியில் காத்திருந்தனர்.

மணக்கோலத்தில் நின்ற ஜோடியை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர். உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.