அடக்கொடுமையே..."13 வயது சிறுமியை கடத்திச் சென்று தொடர் பாலியல் வன்கொடுமை... 3 குழந்தைகளின் தந்தை செய்த செயல்.?

அடக்கொடுமையே..."13 வயது சிறுமியை கடத்திச் சென்று தொடர் பாலியல் வன்கொடுமை... 3 குழந்தைகளின் தந்தை செய்த செயல்.?



midde-aged-man-kidnapped-a-13-year-old-girl-and-continu

கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை  கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  மூன்று குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் செல்போன் மூலம் துப்பு துலங்கியது  மக்களிடத்தில் பாராட்டை பெற்றிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சார்ந்த  எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி  கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

tamilnadu

இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையின் விசாரணையின் போது சிறுமியின் வீட்டிற்கு அருகிலிருந்த செல்வகுமார் என்ற மூன்று குழந்தைகளின் தந்தையும் மாயமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் கடத்தி இருக்கலாம் என்று காவல்துறையின் சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து அவரை கண்டுபிடிப்பதற்காக அவரது செல்போன் எண்ணை வைத்து ட்ராக் செய்தது காவல்துறை.

அவரது செல்போன் சிக்னலின் மூலம் நாகப்பட்டினத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் அங்கு சென்று செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் விசாரித்த போது  நாகப்பட்டினத்தில் அறை வாடகைக்கு எடுத்து தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியையும் செல்வக்குமாரையும் நாகர்கோவில் அழைத்து வந்த காவல்துறை  சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய  செல்வகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.