கடையில் ஓட்டைபோட்டு காப்பர் ஒயர்கள் திருட்டு.. கொள்ளையர்களுக்கு காவல்துறை வலைவீச்சு..!

கடையில் ஓட்டைபோட்டு காப்பர் ஒயர்கள் திருட்டு.. கொள்ளையர்களுக்கு காவல்துறை வலைவீச்சு..!


mens-thieft-hardware-shop-copper

ஹார்டுவேர் கடையில் ஓட்டையிட்டு, காப்பர் ஒயர்களை திருடி சென்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகாமையில், ஹார்டுவேர்ஸ் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் யாரும் இல்லாத போது, கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள காப்பர் ஒயர்களை களவாடிச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், காலை கடை உரிமையாளர் ராமதாஸ் வந்து பார்க்கும்போது, சுவரில் ஓட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் இருக்கிறதா? என்று தேடுகையில் தான் அங்குள்ள காப்பர் ஒயர்கள் அனைத்தும் திருடு போனது தெரியவந்தது.

cctv

இதனையடுத்து கடை உரிமையாளர் உடனடியாக அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் மர்மநபர்கள் சிலர் சுவரை ஓட்டையிட்டு உள்ளே சென்று காப்பர் ஒயர்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.