அதிமுகவினரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்..! வருத்தத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.!!



mathusoothanan-wife-passed-away

அதிமுக மூத்த தலைவரும் அவைத்தலைவருமான மதுசூதனன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது மனைவி ஜீவா மதுசூதனன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

மதுசூதனன் மருத்துவமனையில் இருக்கும்போதே அவரது மனைவி உயிரிழந்தது அதிமுக மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜீவா மதுசூதனன் மறைவிற்கு அதிமுகவினர் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜீவா மதுசூதனன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கழக அவைத் தலைவர் மரியாதைக்குரிய திரு.மதுசூதனன் அவர்களின் மனைவி திருமதி. ஜீவா மதுசூதனன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திருமதி.ஜீவா மதுசூதனன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.