சிதறிய உடல்கள்.! மனைவி தற்கொலை செய்துகொண்டதால் இரண்டு குழந்தைகளுடன் தந்தை எடுத்த கோர முடிவு..!

சிதறிய உடல்கள்.! மனைவி தற்கொலை செய்துகொண்டதால் இரண்டு குழந்தைகளுடன் தந்தை எடுத்த கோர முடிவு..!


Man suicide with kids because of wife suicide

மனைவி இறந்த சோகம் தாங்காமல் கணவன் இரண்டு குழந்தைங்களுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவருக்கு நிர்மலா (24) என்ற மனைவியும் 2 மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனை காரணமாக வீட்டில் நிர்மலா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருந்த வெங்கடேசன், தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வாலாஜாபேட்டை ரயில் நிலையம் சென்றுள்ளார்.

suicide

தற்கொலை எண்ணத்தில் அங்கு சென்ற வெங்கடேசன் ரயில் வருவதை பார்த்து தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் விழுந்துள்ளார். இதில் வெங்கடேசன் உட்பட இரண்டு குழந்தைகளும் உடல் சிதறி பலியாகினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.