குடும்ப கஷ்டத்திற்காக மனைவியை பிரிந்து வெளியூரில் வேலை பார்த்த கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட கள்ளக்காதல்! ஒரே நாளில் முடிந்த வாழ்க்கை!
குடும்ப கஷ்டத்திற்காக மனைவியை பிரிந்து வெளியூரில் வேலை பார்த்த கணவன்! மனைவிக்கு ஏற்பட்ட கள்ளக்காதல்! ஒரே நாளில் முடிந்த வாழ்க்கை!
பீகார் மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு என்ற இடத்தில் தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியை பீகாரில் விட்டு விட்டு அருண்குமார் மட்டும் கன்னியாகுமரியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் பீகாரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருண்குமாரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக சென்று வந்தபோது, அங்குள்ள ஊழியருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழக ஆரம்பித்துள்ளனர். இதை அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர்.
ஆனாலும் அவர்கள் இருவரின் பழக்கம் காதலாக மாறி, தனது தொடர்பை அவரால் கைவிட முடியவில்லை. ஒருகட்டத்தில் அருண்குமாரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பீகாரில் உள்ள உறவினர்கள், அருண்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதை அறிந்த அருண்குமார் மனவேதனையடைந்து, தினமும் சோகமாகவே இருந்துள்ளார். ஒருகட்டத்தில், மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாரே என விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்து, நேற்று முன்தினம் இரவு தென்னந்தோப்பில் உள்ளஆழமான கிணற்றில் திடீரென குதித்து விட்டார்.
இதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. பின்னர் தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.