தற்கொலைக்கு முயன்ற மனைவி; இறுதியில் காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்.!
தற்கொலைக்கு முயன்ற மனைவி; இறுதியில் காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்.!
மதுரை கே.புதூரை அடுத்த மருதங்குளம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் யுவராஜ் (45), கவிதா(37). யுவராஜ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கவிதா வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகில் இருந்தவர்கள் சிலர் கவிதாவிடம் கடனாக பணம் பெற்றுள்ளனர். பணம் வாங்கியவர்கள் மீண்டும் கவிதாவிடம் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த நேற்றும் வழக்கம் போல் இருவருக்குமிடையே சண்டை நிகழ்ந்துள்ளது. இதனால் மனமுடைந்த கவிதா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த யுவராஜ் மனைவியை காப்பாற்றும் நோக்கில் அவரும் குதித்துள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்து யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிதா படுகாயங்களுடன் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கே.புதூர் காவல்துறையினர், யுவராஜ் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.