பச்சபிள்ளையப்போயி... டியூசனுக்கு வந்த 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 23 வயது இளைஞனால் நடந்த பயங்கரம்..!

பச்சபிள்ளையப்போயி... டியூசனுக்கு வந்த 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 23 வயது இளைஞனால் நடந்த பயங்கரம்..!



Madhya Pradesh Vidhisha Tuition Master Abused 8 Age Minor Girl

 

உருது மொழி படிக்க டியூசன் வந்த சிறுமி, டியூசன் மாஸ்டரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டம், பதாரியா பகுதியில் 8 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் ஷாருக்கான் என்ற 23 வயது இளைஞர் உருது டியூசன் எடுத்து வருகிறார். சிறுமி உருது கற்றுக்கொள்ள டியூசன் சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த அக். 4ம் தேதி டியூசன் முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி வயிறு வலிப்பதாக கூறி கதறி அழுதுள்ளார். அவரை தாய் சோதிக்கையில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியிடம் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பினர். அப்போது, சிறுமி கூறிய தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Madhya pradesh

அதாவது, டியூசன் மாஸ்டராக இருந்து வந்த ஷாருக்கான், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி அனுப்பி இருக்கிறார். இந்த தகவலை அறிந்த பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். 

பின்னர், கடந்த அக். 6ம் தேதி பதாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷாருக்கானை கைது செய்தனர். மேலும், அவரின் வீடு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருந்தது வருவாய்த்துறையினர் மூலமாக உறுதி செய்யப்பட்டதால், அதனை இடித்து அகற்றினர். போக்ஸோவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டான்.