15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்... 2 கிழட்டு காமுகன்கள் பயங்கர செயல்.. அதிரவைக்கும் சம்பவம்.!

15 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்... 2 கிழட்டு காமுகன்கள் பயங்கர செயல்.. அதிரவைக்கும் சம்பவம்.!



madhurai-girl-raped-by-2mens

15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய 2 முதிய காமுகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மகள் அருகாமையில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை சில மாதங்களுக்கு முன்னதாக இறந்த நிலையில், சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். 

அப்போது உயிரிழந்த தந்தையின் மிகவும் நெருங்கிய நண்பரான ரமேஷ் என்பவர் சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

madhurai

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில், சிறுமியின் வீட்டருகே உள்ள பாலமுருகன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து அறிந்த சிறுமியின் தந்தையின் நண்பர் ரமேஷ் என்பவரும் வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரிவந்துள்ளது.

பின் இந்த விஷயம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்துறையினர், பாலமுருகன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.