அடப்பாவமே!! காதலியின் பாய் பெஸ்டிக்கு நேர்ந்த கொடூரம்... துணிகர செயலில் ஈடுபட்ட காதலன்..!

அடப்பாவமே!! காதலியின் பாய் பெஸ்டிக்கு நேர்ந்த கொடூரம்... துணிகர செயலில் ஈடுபட்ட காதலன்..!


lover-who-killed-girlfriends-boy-bestie

சென்னை வியாசர்பாடியில் நடந்த கொடூர சம்பவம். பஷீர் என்ற நபர் ஹாஜிரா என்ற பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் ஹாஜிராவுக்கு பாய் பெஸ்ட்டியான ராஜேஷ் உடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

ராஜேஷ் வியாசர்பாடியில் புளியந்தோப்பு பகுதியில் ஆடு தொட்டியில் ஆடுகளை பராமரிக்கும் பணியை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜேஷ் தன் பணியை முடித்துவிட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் ஒன்றில் ஓய்வெடுப்பதற்காக உறங்க சென்றுள்ளார்.

Murder

இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது தீ வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் பலத்த தீக்காயம் அடைந்து ராஜேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது வியாசர்பாடியை சேர்ந்த பஷீர் என்பது உறுதியானது. இதனால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.