அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
திமுகவின் கோட்டையில் களமிறக்கப்பட்டுள்ள குஷ்பூ.! பாஜகவின் பக்கா பிளான்.!
திமுகவின் கோட்டையில் களமிறக்கப்பட்டுள்ள குஷ்பூ.! பாஜகவின் பக்கா பிளான்.!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் பாஜகவில், சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் நடிகை குஷ்பூவை, சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிக்கு பாஜக நியமனம் செய்துள்ளது.
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியாக இருந்த போதும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி ஆனபோதும் அந்த தொகுதியில் 2011, 2016 தேர்தலில் வெற்றி பெற்றவர் ஜெ.அன்பழகன். நடிகை குஷ்பு திமுகவில் இருந்த போதும், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் மறைந்த ஜெ.அன்பழகனுடன் நல்ல நட்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you @BJP4India @BJP4TamilNadu @Murugan_TNBJP avl @CTRavi_BJP avl @ReddyPonguleti gaaru @blsanthosh avl for giving me the responsibility as the incharge of #ChepaukThrivallikeni Promise to do my best and deliver the best. #AssemblyElectionsTN2020 pic.twitter.com/egRAeVU0sw
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 16, 2020
இந்நிலையில் தற்போது தொகுதி வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூவை தற்போது திமுக கோட்டையாக இருக்கும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியின் பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளது பாஜக. இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பூ, தன மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்ட பணியை முழுமையாக பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளார்.