மாத செலவுகளுக்கு பணம் அனுப்பாத காரணத்தால், மனைவி தற்கொலை: ஊத்தங்கரையில் சோகம்.!

மாத செலவுகளுக்கு பணம் அனுப்பாத காரணத்தால், மனைவி தற்கொலை: ஊத்தங்கரையில் சோகம்.!



Krishnagiri Uthangarai 24 Aged Married Women Suicide 


கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை, எக்கூர் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த்சாமி. இவரின் மனைவி கார்த்திகா (வயது 24). 

தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள் இவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

அரவிந்த்சாமி வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், குடும்ப செலவுக்கு மாதம் பணம் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் மன வருத்தத்தில் இருந்த கார்த்திகா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த சிங்காரப்பேட்டை காவல் துறையினர், கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.