காதல் பெயரில் சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த காமுகன்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.. கண்ணீரில் பெற்றோர்கள்..!
காதல் பெயரில் சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த காமுகன்.. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்.. கண்ணீரில் பெற்றோர்கள்..!
ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவியை காதல் எனும் பெயரில், ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகாமையில் பரப்பற்று இளந்தோப்புவிளை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் குழித்துறையில் 13 வயது சிறுமி ஒருவர் அவரது பாட்டி வீட்டில் பகுதியில் தங்கி 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
அப்போது சிறுமிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. அத்துடன் காதலை பகடைக்காயாக பயன்படுத்திய அந்த காமுகன் சிறுமி எனக்கூட பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இருப்பினும் இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் என்ன நடந்தது? எனக் கூறுமாறு கேட்டுள்ளனர். அப்போது மாணவி நடந்த சம்பவங்களை முழுமையாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் குமார் மீது குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏழாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்காக குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.