திரையுலகமே பெரும் அதிர்ச்சி!! காஞ்சனா பட நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திரையுலகமே பெரும் அதிர்ச்சி!! காஞ்சனா பட நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணமா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்..



Kanchana 3 actress Alexandra death news

காஞ்சனா 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஷ்யாவை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான அலெக்சாண்ட்ரா ஜாவி கோவாவில் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் ரோஸி என்ற வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரஷ்யாவை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான அலெக்சாண்ட்ரா ஜாவி. இவர் கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலனுடன் வசித்துவந்தார். 

Crime

இந்நிலையில் நேற்று இரவு அறையின் உள்புறம் பூட்டப்பட்டிருந்தநிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில் மீட்கப்பட்டுள்ளார் அலெக்சாண்ட்ரா ஜாவி. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது காதலருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த அலெக்சாண்ட்ரா ஜாவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேநேரம், கடந்த 2019 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர் ஒருவர் மீது அலெக்சாண்ட்ரா ஜாவி பாலியல் புகார் கொடுத்திருந்தநிலையில், அந்த நபர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். ஒருவேளை இந்த சம்பவத்தினால் நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.