"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
1 இல்ல.. மொத்தம் 3 மனைவிகள்.. செல்போன் முழுக்க உல்லாச வீடியோ.. டார்ச்சர் கொடுத்த கணவனை கைது செய்த போலீசார்..
1 இல்ல.. மொத்தம் 3 மனைவிகள்.. செல்போன் முழுக்க உல்லாச வீடியோ.. டார்ச்சர் கொடுத்த கணவனை கைது செய்த போலீசார்..
மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரை பூர்வீகமாக கொண்ட கோடீஸ்வரர் ஒருவரின் இளையமகன் சபீக் அகமது என்பவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சானடோரியத்தில் தோல் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து, இரண்டு மனைவிகளும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் சபீக் அகமது மூன்றாவதாக ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கும் இது மூன்றாவது திருமணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மூன்றாவது திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை தொடங்கியநிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.
தனது மனைவி கர்ப்பமானது தெரிந்து அந்த கருவை வலுக்கட்டாயமாக கலைத்துள்ளார் சபீக் அகமது. மேலும் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது அதனை வீடியோ மற்றும் புகைப்படமாகவும் எடுத்துவைத்துள்ளார் சபீக். இப்படி தொடர்ந்து தனது மனைவியை சபீக் டார்ச்சர் செய்ததால் ஒருகட்டத்தில் அவரது கொடுமை தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திவிட்டு, தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த பெண்.
இதனால் கோபமடைந்த சபீக், தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த சபீக், தன்னுடன் வந்து குடும்பம் நடத்தவில்லை என்றால், நாம் இருவரும் தனிமையில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால் அதற்கும் மனைவியிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. இதனால் மனைவியின் அந்தரங்க புகைப்படம் ஒன்றை தனது வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார் சபீக். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மூன்றாவது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, வழக்கு பதிவு செய்த போலீசார் சபீக்கை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சபீக்கின் மூன்றாவது மனைவியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் இல்லாமல், அவரது முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் சபீக் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் சபீக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.