மனைவியுடன் தனிமையில் இருந்த விடீயோவை நண்பனுக்கு அனுப்பிய புது மாப்பிளை! பகீர் தகவல்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளம் பெண் செலின். இவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் அதே மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த அருண் என்பவர் செலினை காதலித்துள்ளார்.
இந்நிலையில் செலின் பெங்களூருக்கு இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தொலைபேசியில் தனது காதலை தெரிவித்துள்ளார் அருண். அருணின் காதலை ஏற்றுக்கொண்ட செலின் இருவரும் பெங்களூரில் சந்தித்துள்ளனர்.
இதனை அடுத்து தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செலினை வரவைத்து அருண் அவரை கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அவரது நண்பர் மணி என்பவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. தனக்கு வேண்டியது கிடைத்துவிட்ட நிலையில் அருண் செலினை கழட்டிவிட முயற்சித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு செலின் பலமுறை கேட்டும் அருண் அதற்கு மறுத்துள்ளார். இதனால் செலின் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலை வந்த நிலையில் அருண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அருண் - செலின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து கணவன் மனைவி இருவரும் பெங்களூரில் தனியாக வசிவந்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் வீட்டிலையே இருந்து செலினுக்கு தொல்லைகொடுத்து வந்துள்ளார் அருண்.
இந்நிலையில் செலின் ஒருநாள் அருணின் ஈமெயில் லை திறந்து பார்த்தபோது கணவன் - மனைவி உல்லாசமாக இருந்த வீடியோயோவை அருண் தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செலின் இதுகுறித்து அருணிடம் கேட்க அவர் பதில் ஏதும் கூறாமல் பெங்களூரில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அருணின் சொந்த ஊருக்கு சென்று செலின் தனது கணவனின் பெற்றோரிடம் விசாரிக்க முற்பட்டதில் அவர்களும் செலினை அடித்து விரட்டியதாக தெரிகிறது. காதலித்து திருமணம் செய்த கணவனே இப்படி கேவலமாக நடந்துகொண்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.