மருந்து இல்லாத ஊசி மூலம் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்! மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
மருந்து இல்லாத ஊசி மூலம் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்! மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஜாஸ்மின் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெபராஜ் வீட்டில் உள்ளவர்களும் அவரது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஜாஸ்மின் ஷைனியை கொலை செய்ய அவரது மாமியார் மற்றும் கணவன் முடிவு செய்து அவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஜாஸ்மின் ஷைனிக்கு கணவர் ஜெபராஜ் மருந்து இல்லாத ஊசியை ஷைனியின் உடம்பில் இரண்டு முறை குத்தியுள்ளார்.
ஆனாலும் மறுநாள் காலை எப்போதும் போல் எழுந்து வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார் ஜாஸ்மின் ஷைனி. இதனையடுத்து ஊசி போட்ட இடத்தில் வலி இருந்ததால் குழந்தையுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில், மருத்துவர்கள் அவரது உடலில் காற்று புகுத்தப்பட்ட ஊசி போடப்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உருவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தனது கணவர் ஜெபராஜ் தான் தனக்கு ஊசி செலுத்தியுள்ளார் என்பது தெரியவர இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஜாஸ்மின் ஷைனி. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷைனியின் கணவர் ஜெபராஜ், மாமியார் ஜெஸ்டின் மற்றும் மாமனார் சௌந்தர்ராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.