கணவன் கூட இருந்தும் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.. பகீர் சம்பவம்..
கணவன் கூட இருந்தும் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி!! கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.. பகீர் சம்பவம்..
கள்ள தொடர்பு காரணமாக மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மல்லிகை நகர் பகுதியில் வசித்து வருபவர் தில்லை குமார் இவரது மனைவி பவித்ரா (25). இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தில்லை குமார் அந்த பகுதியில் இளநீர் வியாபாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் தனது மனைவியை காணவில்லை என ஒருநாள் தில்லை குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் தில்லை குமாரின் மனைவி பவித்ரா, அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ் தீபன் என்னும் வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தநிலையில், அவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதனை அடுத்து இரண்டு வீட்டார் முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கணவன் தில்லையுடன் பவித்ராவை ஒன்று சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த தில்லை மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு முன் பவித்ரா நிற்றுக்கொண்டிருக்க, குழந்தைக்கு முத்தம் கொடுப்பதுபோல் பவித்ராவின் அருகில் சென்ற தில்லை, தான் மறைத்துவைத்திருந்த இளநீர் வெட்டும் அருவாளை எடுத்து பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தில்லையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.