கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்! வெளியான அதிரவைக்கும் பின்னணி!

கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்! வெளியான அதிரவைக்கும் பின்னணி!


husband killed pregnant wife

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி அவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு ஜீவிதா என்ற மகள் உள்ளார். அவர் பொறியியல் பட்டதாரி ஆவார். இவருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிந்து வந்த கமல்காந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

மேலும் திருமணத்தின் போது சுப்ரமணி தனது மகளுக்கு 80 சவரன் தங்க நகை மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு கமல்காந்த் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவருக்கும் ஜீவிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஜீவிதாவும் கர்ப்பமாக இருந்துள்ளார்.

job

இந்நிலையில் நேற்று ஜீவிதா கமல்காந்தை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கமல் ஜீவிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் .பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது தனது கையில் நரம்பு எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கமல்காந்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஜீவிதாவின் பெற்றோர்கள் கமல்காந்த் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கமலின் தந்தை வழக்கறிஞர் என்பதால் அவருக்கு ஆதரவாக போலீசார்கள் செயல்படுவதாக கூறி ஜீவிதாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.