மனைவி பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் கணவன் செய்த செயல்.! மனைவிக்கு வந்த சந்தேகம்! நடுத்தெருவில் தவிக்கும் இளம்பெண்.!

மனைவி பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் கணவன் செய்த செயல்.! மனைவிக்கு வந்த சந்தேகம்! நடுத்தெருவில் தவிக்கும் இளம்பெண்.!


husband cheated his wife

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தகாட்டூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரை மணிகண்டன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஈரோட்டில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து திருமணம் ஆன சில மாதங்களிலே தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சமாதானம் அடைந்ததால், மணிகண்டன் மாமியார் வீட்டில் இருந்து சுமார் 30 சவரன் நகை வரதட்சனையாக பெற்றுள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த மணிகண்டன் ஆன்லைன் சூதாட்ட மோகத்தில் அடிமையாகி கையிலிருந்த பணம் அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார் மணிகண்டன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் இல்லாததால், தன் மனைவி பெற்றோர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவரது நகைகளை எடுத்து விற்று அந்த தொகையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு நகையையும் இழந்துள்ளார். இதனை மனைவியிடம் மறைப்பதற்காக போலி நகைகளை செய்து வீட்டில் வைத்துள்ளார். இதனால் மனைவிக்கு சந்தேகம் வந்துள்ளது.

husband and wife

இந்தநிலையில், போலி நகைகளை செய்து வீட்டில் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக மணிகண்டனின் மனைவி தமிழ்ச்செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையின் போது கணவன் மணிகண்டன், ஆன்லைன் சூதாட்டத்தில் தான் விட்ட பணத்தை பிடிப்பதற்காக தனது மனைவியின் நகைகளை விற்று விளையாடியதாகவும் அந்த பணத்தை பறிகொடுத்ததால், போலி நகைகளை மாற்றி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அப்போது போலீசாரிடம், மணிகண்டன் பணம் நகையை 6 மாதத்தில் திருப்பி தருவதாக எழுதி கொடுத்துள்ளார். 

கணவனின் இந்த பொறுப்பற்ற செயலால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி இதுவரை அவரது நகை திரும்பி வராததால் நேற்று நகைகளை திரும்பக் கேட்டு கொங்கணாபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.