படுக்கை அறையில் இருந்த ரகசிய கேமிரா! கேமிரா இருப்பது தெரியாமல் வேலைக்கார பெண் செய்த மோசமான காரியம்.

படுக்கை அறையில் இருந்த ரகசிய கேமிரா! கேமிரா இருப்பது தெரியாமல் வேலைக்கார பெண் செய்த மோசமான காரியம்.


House worker stole 19 lakhs money

சென்னை அபிராமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் பெரியவண்ணன். தொழிலதிபரான இவர் வீட்டின் படுக்கைறையில் இருந்த பீரோவில் இருந்து தொடர்ச்சியாக பணம் திருடுபோய்யுள்ளது. முதலில் சிறு சிறு தொகை என்பதால் அதை பெரியவண்ணன் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் அடுத்தடுத்து பெரிய அளவில் பணம் திருட்டு போய்யுள்ளது. யார் மீது சந்தேகப்படுவது என தெரியாமல், வீட்டின் படுக்கை அறையில் ரகசிய கேமிரா வைத்து கண்காணித்துள்ளார் பெரியவண்ணன். அவர் எதிர்பார்த்ததுபோலவே சில நாட்களில் மீண்டும் பணம் திருடுபோய்யுள்ளது.

Crime

இதனை அடுத்து கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பெரியவண்ணன் சோதித்ததில், அவர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் பெரியவண்ணன் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் விசாரணையில் இதுவரை சுமார் 19 லட்சத்திற்கு மேல் அந்த பெண் திருடியுள்ளதாகவும், அந்த பணத்தில் 40 சவரன் தங்க நகை வாக்கியத்தையும், சிறிது பணத்தை வீட்டில் வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.