நான் டிராஃப் செய்கிறேன் வா.. நண்பருடன் பயணம் செய்தவருக்கு வழியில் ஏற்பட்ட சோகம்.. கதறும் குடும்பத்தினர்.!
நான் டிராஃப் செய்கிறேன் வா.. நண்பருடன் பயணம் செய்தவருக்கு வழியில் ஏற்பட்ட சோகம்.. கதறும் குடும்பத்தினர்.!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் உசைன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷேக் உசைனின் வீட்டிற்கு அருகில் முரளிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஷேக் உசைன் மற்றும் முரளிகுமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முரளிகுமார், ஷேக் உசைனை வல்லத்தில் டிராஃப் செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மருதகுளம் சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது பின்னால் வந்த ஒரு ஸ்கூட்டர் முரளிகுமாரின் வாகனத்தில் மோதியதில் ஷேக் உசைன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முரளிகுமார் பலத்த காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர்.