தொழில் நஷ்டத்தால் வியாபாரி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்..!

தொழில் நஷ்டத்தால் வியாபாரி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்..!



Goat trader hanged due to business loss.. Shocking incident..!

கோவில்பட்டி அடுத்த வானரமுட்டி பகுதியில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவர் ஆட்டு வியாபார தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுடலைமுத்துவிடும் ஆடு வாங்கிய சிலர் அவருக்கு பணம் தராமல் அலைக்கழித்துள்ளனர்.

இதனால் சுடலைமுத்துவிற்கு ஆடு விற்பனை செய்தவர்களிடம் இவரால் உரிய நேரத்தில் பணத்தை திருப்பி தர முடியவில்லை. இதனையடுத்து மிகுந்த மன வேதனையில் இருந்த சுடலைமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மாட்டு கொட்டகையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

Business Loss

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுடலைமுத்துவை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து அவரை மீண்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுடலைமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.