அண்ணனின் காதலுக்கு உதவிய தங்கை! அண்ணனின் எல்லை மீறிய செயலால் தங்கை கர்ப்பம்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
அண்ணனின் காதலுக்கு உதவிய தங்கை! அண்ணனின் எல்லை மீறிய செயலால் தங்கை கர்ப்பம்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பாரதி நகரில் வசித்து வருபவர் சந்திரசேகரன். 26 வயது நிறைந்த அவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகளான தங்கை உறவுமுறையில் உள்ள 16 வயது சிறுமி உதவியாக இருந்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் வீட்டில் சந்திரசேகரன் தனது காதலியை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அடிக்கடி அந்த சிறுமி வீட்டுக்கு சென்று வந்த சந்திரசேகரன்,ஒரு நாள் தனது காதலியை பெரியப்பா வீட்டில் சந்தித்து அவரை அனுப்பிவிட்டு தனது சகோதரியான பெரியப்பாவின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அண்ணன் சந்திரசேகரன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மகளிர் போலீசார் சந்திரசேகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.