நீண்ட போராட்டத்திற்குபின் கைகூடிய காதல்! திருமணமான 4 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்! வெளியான பகீர் காரணம்!

நீண்ட போராட்டத்திற்குபின் கைகூடிய காதல்! திருமணமான 4 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்! வெளியான பகீர் காரணம்!



girl suicide for husband torture

ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தவர்  ஜான்சி. அவரது கணவர் சாய் தேஜா. இவர்கள் திருமண விழா ஒன்றில் சந்தித்து காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களது காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஜான்சி மற்றும் சாய்தேஜா இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனையடுத்து அவர்களை கண்டுபிடித்து வீட்டிற்க்கு அழைத்து வந்த அவர்களது குடும்பத்தினர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

சாய் தேஜா தனது பெற்றோருக்கு ஒரே மகன். அதனால் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல்  நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து ஊர்சுற்றி வந்துள்ளார்.மேலும் திருமணத்திற்குப் பிறகும் மாறாமல் அப்படியே இருந்துள்ளார். இந்நிலையில் அவரை வேலைக்கு செல்லக்கூறி அவரது பெற்றோர் மற்றும் ஜான்சியும் தொடர்ந்து வற்புறுத்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அவ்வப்போது கடுமையான சண்டை நேர்ந்து வந்துள்ளது.

suicide

இந்நிலையில், சமீபத்தில் குடுமத்தில் உள்ள அனைவரும் படத்திற்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சாய்தேஜா மிக லேட்டாக வந்துள்ளார். இதனால் அவரது தந்தை சாய்தேஜாவை கண்டித்துள்ளார். இந்நிலையில் கோபமடைந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜான்சி, கதவை தாழ்பாளிட்டு அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  ஜான்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.